×

மனைவிக்கு கத்தி வெட்டு: கணவன் கைது

ஆவடி: அம்பத்தூரை அடுத்த புத்தகரம், மேற்கு வணவன் நகரை சேர்ந்தவர் அருண் (21). கூலி தொழிலாளி. இவரது மனைவி சினேகா(21). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இதற்கிடையில், அருணுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. அருணின் மதுப்பழக்கத்தை நிறுத்த போதை மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்க சினேகா முடிவு செய்தார். இதனை அடுத்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அருணை, ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சினேகா கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர், அருண் சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு திரும்பினார். இதன்பிறகு, மறு வாழ்வு இல்லத்தில் சேர்த்தது தொடர்பாக சினேகாவுடன், அருண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சினேகா கொரட்டூர், வாட்டர் கெனால் ரோட்டில் உள்ள சாலை ஓரத்தில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அருண், சினேகாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரை நடுரோடில் வைத்து மீன் வெட்டும் கத்தியால் அருண் வெட்டியுள்ளார். இதில், சினேகாவுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.  பின்னர், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கொரட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து  வருகின்றனர். புகாரின் அடிப்படையில், கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருணை நேற்று மாலை கைது செய்தனர்….

The post மனைவிக்கு கத்தி வெட்டு: கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Arun ,Budhagaram, West Vanavan ,Ambattur ,Sneha ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...