- தீரன் சின்னமலை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- திருப்பூர் மகளிர் கல்லூரி புதிய கட்டிட தொடக்க விழா
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- திரான் சின்னமலை
- திருப்பூர் மகளிர் கல்லூரி
சென்னை: தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொலிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன். திருப்பூர் வஞ்சிப்பாளையம் தீரன் சின்னமலை மகளிர் கல்லூரி புதிய கட்டடத்தை திறந்து வைத்து முதல்வர் பேசியதாவது,
திமுக ஆட்சியில்தான் திருப்பூரில் 2 மகளிர் கல்லூரி
திமுக ஆட்சியில்தான் திருப்பூருக்கு 2 பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் பகுதியில் உள்ள பெண்களுக்கான கல்லூரியாக இன்று மாறியுள்ளது. கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக அறிவித்தவர் கலைஞர். தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்லூரி கட்ட ஏற்பாடு செய்து கட்டி முடிக்கப்பட்டது.
மாணவர்கள் உலகெங்கும் போய் சாதிக்க வேண்டும்
தமிழ்நாட்டு மாணவர்கள் உலகமெல்லாம் போய் சாதிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார.
The post தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும் எழுச்சியும் வருகிறது: திருப்பூர் மகளிர் கல்லூரி புதிய கட்டட திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.