×

சனிதோறும் படியுங்கள் எம்.ஆர்.பாளையம் காப்புக்காடு யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு திருநெல்வேலியில் இருந்து புதுவரவு

திருச்சி, நவ.29:எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டிற்கு, திருநெல்வேலியில் இருந்து புது வரவாக ஜெயின்னி என்ற யானை கொண்டு வரப்பட்டது. இதனை அதிகாரிகள் பார்வையிட்டனர். திருச்சி மாவட்டம், திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம், எம்.ஆர் பாளையம் காப்புக்காட்டு பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மத்திய விலங்கு காட்சியக ஆணையம் (Central zoo Authority) அனுமதியுடன் தமிழ் நாடு அரசு வனத்துறை கட்டுப்பாட்டில் 10 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின்படி திருநெல்வேலி வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உரிமம் பெறாமலும், சரியான பராமரிப்பு இல்லாமலும், மேலும் யானைகளை பிச்சை எடுக்க வைத்தும் யானையை துன்புறுத்துவதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் `ஜெயின்னி’ என்ற 58 வயது மதிக்கத்தக்க பெண் யானையை திருச்சி யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிடப்பட்டது.

இதன்பேரில் நேற்று காலை 10 மணியளவில் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. யானையை உரிமம் இல்லாமல் வைத்திருந்ததை திருநெல்வேலி மாவட்ட வன அலுவலரின் அறிக்கையின் பெயரில் தலைமை வன உயிரின பாதுகாவலரின் ஆணையில் மேற்கண்ட, பெண் யானையினை நேற்று காலை 10 மணியளவில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

புதிதாக வரப்பெற்ற ஜெயின்னி பெண் யானையினை தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின் பெயரில் மாவட்ட வன அலுவலர் சோமேஸ் சோமன் (முழு கூடுதல் பொறுப்பு ), உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், சரவணன்குமார் மற்றும் வனச்சரக அலுவலர் சுப்ரமணியம் ஆகியோர் யானைகளை ஆய்வு செய்தனர். பின், வன கால்நடை மருத்துவ அலுவலர் அவர்கள் யானைகளை பரிசோதித்து அதன் வயது, உடல் நிலை, எடை அளவு ஆகியவற்றின் அடிப்படையில் யானைகளுக்கு வழங்கப்பட வேண்டிய திட உணவுகள், பசுந்தீவனம், காய்கறிகள், பழங்கள் ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியவைகள் குறித்து அறிக்கை வழங்கியதன் அடிப்படையில் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post சனிதோறும் படியுங்கள் எம்.ஆர்.பாளையம் காப்புக்காடு யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு திருநெல்வேலியில் இருந்து புதுவரவு appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,MR Palayam Reserve Forest Elephant Rehabilitation Centre ,Trichy ,Jainni ,MR Palayam reserve ,MR Palayam Reserve Forest Elephant Rehabilitation Center ,
× RELATED திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர்...