×

உடையார்பாளையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு

ஜெயங்கொண்டம்,நவ.29: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி கிராமம் தா.பழூர்-விளாங்குடி சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை சேதமடைவதாக கூறி கோரைக்குழி கிராமத்தை சேர்ந்த கோபால், சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த நக்கீரன்(45), ராஜேந்திரன், கண்ணன், சக்திவேல் 5 பேர் மற்றும் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சுத்தமல்லி விஏஓ பிரபாகரன் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் எஸ்ஐ திருவேங்கடம் 5 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post உடையார்பாளையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Udaiarpalayam ,Jayangondam ,Sutthamalli village ,Udaiarpalayam, Ariyalur district ,Palur-Vlangudi road ,Udyarpalayam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...