×

பாடாலூரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

பாடாலூர்,நவ.29: பாடாலூரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு பாடம் கற்றுக்கொடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பாடம் வாரியாக திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெறுகிறது. பயிற்சியில் கற்றல் விளைவுகள் குறித்தும், ஆசிரியர்களின் முந்தைய அனுபவம் ஆகியன சார்ந்தும் பயற்சியில் கற்பிக்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவன்னன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது போன்ற பயிற்சிகளுக்கு ஆசிரியர்கள் தவறாது கலந்து கொண்டு பயற்சியினை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு மாணவர்களின் கற்றல் அடைவு திறனுக்கு வழிவகுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். நேற்று நடைபெற்ற கணித பாட ஆசிரியர்களுக்கான பயற்சிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நெடுஞ்செழியன் கருத்தாளராக இருந்து செயல்பட்டார். மேலும் பயிற்சியினை அரசு மாதிரி பள்ளி தலைமையாசிரியர் மாலதி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் திலகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் வஹிதா பானு ஆகியோர் பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆனந்த், பரிமளா, இளங்கோவன், அன்பரசன் ஆகியோர் பயற்சியின் ஒருங்கிணைப்பாளாராக செயல்பட்டனர். இன்று அறிவியல் மற்றும் சமுக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

The post பாடாலூரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Padalur ,Badalur ,Aladhur taluka ,Perambalur ,Dinakaran ,
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...