×

சீசன் துவக்கம் எதிரொலி கிரிவீதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

 

பழநி, நவ.29: சீசன் துவங்கி உள்ள நிலையில் பழநி கிரிவீதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீசன் துவங்கி உள்ளதால் பழநி அடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவு நடமாடுகின்றனர். இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக எண்ணற்ற கடைகள் இச்சாலையில் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிரிவீதியின் வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் பஸ்கள், தண்ணீர் லாரிகள் போன்றவை அதிகளவு செல்கின்றன. ஆக்கிரமிப்பில் அகப்பட்டு சாலை குறுகலாக இருக்கும் நேரத்தில் கனரக வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இனி தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக் காலங்கள் இருப்பதால் அலகு குத்தியும், பல்வேறு வகையான காவடிகள் எடுத்தும் பக்தர்கள் கிரிவீதிகளில் அதிகளவு வலம் வருவர்.

இதுபோன்ற நேரங்களில் கனரக வாகனங்கள் இச்சாலைகளில் செல்லும்போது பக்தர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, அக்னி நட்சத்திர குழு திருவிழா காலங்களில் கிரிவீதி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பதுபோல், வரும் மே மாதம் வரை கிரிவீதியில் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாகனங்கள் பைபாஸ் சாலை வழியாக மாற்றுப்பாதையில் இயக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சீசன் துவக்கம் எதிரொலி கிரிவீதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Griveeta ,PALANI ,PALANI GRIVEET ,Griveet ,Dinakaran ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை