×

அவனியாபுரத்தில் சிறுவன் உள்பட 5 பேருக்கு வெட்டு: மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

 

அவனியாபுரம், நவ. 29: மதுரை பெருங்குடி சங்கையா கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (50). இவர் தனது பேரன் சர்வேஷ் (6)க்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெருங்குடியை சேர்ந்த மாரி, சசிக்குமார் ஆகியோர் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அப்போது பெரியசாமி, ஏன் இப்படி பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாரி, சசி ஆகியோர் கத்தியால் தாக்கியதில் சிறுவன் சர்வேஷிற்கு பலத்த வெட்டு விழுந்துள்ளது. தொடர்ந்து பெரியசாமியையும் கத்தியால் தாக்கியுள்ளனர். மேலும் தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த கணபதி (26), விஜயகுமார் (27), அஜித் (28) ஆகியோரையும் கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடயே இச்சம்பவத்தில் ஜாதி பெயரை தாக்குதல் நடத்தியதாக கூறி சங்கையா கோயில் தெரு மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து, கிழக்கு மாவட்ட செயலாளர் அரசமுத்து பாண்டியன் உள்பட 80 பேர் அவனியாபுரம் அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தெற்கு வாசல் உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன், திருமங்கலம் டிஎஸ்பி வசந்த், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post அவனியாபுரத்தில் சிறுவன் உள்பட 5 பேருக்கு வெட்டு: மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Avanyapura ,AVANIAPURAM ,Periyasami ,Madurai Perungudi Sangaiah Temple Street ,Avanyapuram ,
× RELATED சித்திரை மாத பிரமோற்சவ தோரோட்டம்...