தென்காசி, நவ.29: தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் மாரிமுத்து, மாவட்ட துணை அமைப்பாளர் கௌதமி தமிழரசன், நகர் மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, கவுன்சிலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகர் மன்ற தலைவர் சாதிர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். நகர துணை செயலாளர்கள் பால்ராஜ், ராம்துரை, பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், சன் ராஜா, ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
The post தென்காசியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் appeared first on Dinakaran.
