×

குட்கா விற்றவர் கைது

ஈத்தாமொழி, நவ. 29: குமரி மாவட்டம் வடக்கு சூரங்குடி வெள்ளாரன்விளை பகுதியை சேர்ந்தவர் அசோகன் (47). இவர் ஈத்தாமொழி அருகே ராமபுரம் பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். அவரது ஓட்டலில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. இதையடுத்து ஈத்தாமொழி போலீஸ் எஸ்ஐ எட்வர்ட் மற்றும் ஏட்டு ஆகியோர் அசோகன் நடத்தி வரும் ஓட்டலுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.மேலும் அசோகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Ethamozhi ,Asokan ,North Surangudi Vellaranvilai ,Kumari district ,Dinakaran ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது