தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பகுதியில் குட்கா விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் ஆய்வாளர் ராஜன் சோதனை நடத்தி, மாவா விற்பனை செய்த பாலசுப்பிரமணி என்பவரை கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தார். அவர் கொடுத்த தகவலின்பேரில், கொருக்குப்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்த அதிமுக 47வது வட்ட செயலாளர் சந்திரசேகர் (49), தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 3வது தெருவை சேர்ந்த சிமியோன் (37) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இதில், அதிமுக வட்ட செயலாளர் சந்திரசேகர், வீட்டில் மாவா தயாரித்து கொருக்குப்பேட்டை பகுதியில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரது வீட்டில் இருந்து 37 கிலோ ஜர்தா, 25 கிலோ சீவல் பாக்கு, 4 கிலோ மாவா, 2 மிக்சி, எடை மிஷின், பேக்கிங் கவர் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அதிமுக வட்ட செயலாளர் மாவா தயாரித்து விற்பனை செய்து, கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கொருக்குப்பேட்டை பகுதியில் போதைப்பொருள் தயாரித்து விற்ற அதிமுக வட்ட செயலாளர் கைது: 37 கிலோ ஜர்தா, 25 கிலோ சீவல் பாக்கு பறிமுதல் appeared first on Dinakaran.