×

சபரிமலையில் 10 நாட்களில் 6.24 லட்சம் பேர் தரிசனம்

கூடலூர்: சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கிய 10 நாட்களில் 6 லட்சத்து 24 ஆயிரத்து 178 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கேரளா மட்டுமல்லாமல், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு கோயிலில் மண்டல பூஜை கடந்த நவ.17ல் தொடங்கியது. அன்று முதல் தினசரி பல்லாயிரம் பக்தர்கள் அலை, அலையாய் வந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். கடந்த 26ம் தேதி வரை 10 நாட்களில் 6 லட்சத்து 24 ஆயிரத்து 178 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மட்டும் 67 ஆயிரத்து 97 பக்தர்கள் ‘விர்ச்சுவல் கியூ ஆன்லைன்’ மூலம் முன்பதிவு செய்துள்ளனர். வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சபரிமலையில் 10 நாட்களில் 6.24 லட்சம் பேர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Lord Ayyappan ,Mandal ,Puja ,
× RELATED இந்தாண்டுக்கான பெரியார் விருது...