×

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசிஐடியின் மனு இன்று மாலை விசாரணை

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கு தொடர்பாக புதிதாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசிஐடி போலீசாரின் மனு இன்று மாலை 4 மணிக்கு விசாரிக்கப்பட உள்ளது. தமிழகமெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சுமார் 190 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று அதன் மூலமாக 30 பேரிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட 30 பேரில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருந்தது. ஏற்கனவே டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 30 நபர்களில் 10 நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை காலை நடைபெற இருந்த நிலையில் தற்போது இன்று மாலை விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனு இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

The post வேங்கைவயல் வழக்கு தொடர்பாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசிஐடியின் மனு இன்று மாலை விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID ,Venkaivyal ,Pudukottai ,Dinakaran ,
× RELATED மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்...