×

அடியாட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்தார்!: அதிமுக மாஜி அமைச்சர் ஜெயபால் மீது சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகார்..!!

சென்னை: தனியார் நிறுவன நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அடியாட்களுடன் வந்து ஜெயபால் மிரட்டியதாக சிசிடிவி ஆதாரங்களுடன் ஏசிடிசி நிறுவன நிர்வாகி ஹேமந்த் போலீசில் புகார் அளித்துள்ளார். ஏசிடிசி நிறுவனத்தில் ஜெயபாலின் மகன் ரத்தீஷ் ரூ.7.5 கோடி முதலீடு செய்த நிலையில் ரூ.13 கோடி திரும்பக் கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஏசிடிசி ஸ்டுடியோ நிறுவனத்தில் ரத்தீஷ் ஜெயபால் ரூ.7.5 கோடி முதலீடு செய்துள்ளார்.

முதலீடு செய்த சில நாட்களில் வெற்று பத்திரத்தில் தன்னை கட்டாயப்படுத்தி ஜெயபால் கையெழுத்து பெற்றதாக ஏசிடிசி நிறுவன நிர்வாகி ஹேமந்த் புகார் அளித்திருக்கிறார். மிரட்டி கையெழுத்து பெற்ற பத்திரங்களை வைத்து உயர்நீதிமன்றத்தில் தன் மீது ரத்தீஷ் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஹேமந்த் புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ரத்தீஷுக்கு ஆதரவாக அவரது தந்தையான முன்னாள் அமைச்சர் ஜெயபால் கொலை மிரட்டல் விடுத்ததாக ஹேமந்த் புகார் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் அடியாட்கள் 10 பேருடன் வந்து ரூ.13 கோடி கேட்டதாகவும் மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதேநிலையில், ஏசிடிசி நிறுவன நிர்வாகி ஹேமந்த்தை மிரட்டியதாக கூறப்படும் புகாருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால் மறுப்பு தெரிவித்திருக்கிறார். முதலீடு செய்த பணத்தை வட்டியுடன் திரும்ப தர வேண்டும் என்று மட்டுமே கேட்டோம் மிரட்டவில்லை என்று ஜெயபால் விளக்கம் அளித்துள்ளார்.

The post அடியாட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்தார்!: அதிமுக மாஜி அமைச்சர் ஜெயபால் மீது சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,-minister ,Jayapal ,Chennai ,Chennai Police ,Commissioner ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...