×

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. நேற்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் வலுப்பெற்று டிச. 1ல் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிக்கு நாளை முதல் 4 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் ‘மிச்சாங்’ என பெயர் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : South Andaman Sea ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...