×

திருவாரூரில் 30ம்தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர், நவ.28: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம்தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலும், இதேபோல் கோட்ட அளவில் ஆர்டிஓக்கள் தலைமையில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியிலும் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாவட்ட அளவிலான விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம்தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 வரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து ெகாண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post திருவாரூரில் 30ம்தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,District ,Collector ,Saru ,Tiruvarur district ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...