×

ஒரே நாளில் 57 பேர் மருத்துவமனையில் அனுமதி புதுகை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்விநியோகம் நிறுத்தம்

புதுக்கோட்டை, நவ.28: புதுக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (28ம்தேதி) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், திருவள்ளுவர் நகர், சுப்பிரமணியர் நகர், சிராஜ்நகர், ஆண்டவர் நகர், ஆர்.எம்.வீ நகர், மேலராஜவீதி, கீழராஜவீதி, தெற்குராஜவீதி, வடக்கு ராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடிரோடு, காந்திநகர், அய்யனார்புரம், கே.எல்.கே.எஸ்.நகர், நிஜாம்காலனி, சத்தியமூர்த்திநகர், அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர், முருகன்காலனி, பாலாஜிநகர், திருநகர், சின்னப்பாநகர், இ.வி.ஆர்.நகர், டைமண்ட்நகர், கோல்டன்நகர், சேங்கைதோப்பு, மருப்பிணிரோடு, கலீப்நகர், திருவப்பூர், திருக்கோகரணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் இன்று (28ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (திருச்சி ரோடு) ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ (தஞ்சாவூர் ரோடு ) ஆகிய இடங்களில் இன்று (28ம்தேதி) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post ஒரே நாளில் 57 பேர் மருத்துவமனையில் அனுமதி புதுகை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Pudukottai ,Pudukottai substation ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு