×

பெயர் பலகை அமைத்த போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி: தந்தை, மகன் படுகாயம்

சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர்ளான அழகேசன் (50), இவரது மகன் கார்த்திக் (25). இவர்களது உறவினர் பிரதாப் (23) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வடபழனியில் தங்கி பெயர் பலகை அமைக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் உள்ள ரத்தினமங்கலத்தில்சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தில் நேற்றும் வழக்கம்போல், பெயர் பலகை அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, சாலையின் குறுக்கே இருந்த உயரழுத்த மின் கம்பிகளை கவனிக்காமல் நான்கு சக்கர உயர் கோபுர ஏணியை மூன்று பேரும் சேர்ந்து தள்ளி கொண்டு சென்றனர். அப்போது, மின் கம்பிகள் மீது ஏணி உரசியதில் மூன்று பேரும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதில், பிரதாப் சம்ப இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.

இதனை அடுத்து, படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அப்பா மற்றும் மகனை அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாழம்பூர் போலீசார் பிரதாப் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பெயர் பலகை அமைத்த போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி: தந்தை, மகன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Alaghesan ,Karthik ,Vikravandi ,Villupuram district ,Pratap ,
× RELATED பூசாரி பாலியல் வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு