×

வருசநாடு அருகே மலைக்கிராம சாலை பணிகளில் தொய்வு: விரைவுபடுத்த கோரிக்கை

 

வருசநாடு, நவ. 28: வருசநாடு அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள மலைக்கிராம தார்ச்சாலை அமைக்கும ்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கேரிக்கை எழுந்துள்ளது. வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட சீலமுத்தையாபுரம் கிராமம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது. இச்சாலையை மீண்டும் அமைக்க வேண்டும் என்று கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து இங்கு புதிய தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக சேதமடைந்த சாலையோரம் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது.இதனால் சாலை பணிகள் விரைவில் துவங்கும் என பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள காந்திகிராமம், ஐந்தரைப்புலி, முத்துநகர், மேல்வாலிப்பாறை, முத்துராஜபுரம், வீரசின்னம்மாள்புரம், வண்டியூர் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இச்சாலையில் மிகுந்த அவதியுடன் தங்கள் பயணத்தை தொடர்கின்றனர். இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லாவிடில் இப்பகுதியில் அதிகம் விளையும் பீன்ஸ், அவரை, எலுமிச்சை உள்ளிட்டவற்றை விற்பனைக்கு கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்படும். எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வருசநாடு அருகே மலைக்கிராம சாலை பணிகளில் தொய்வு: விரைவுபடுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Malaikrama ,Varasanadu ,Malaikrama Tarshala ,Varasanad ,Dinakaran ,
× RELATED வருசநாடு அருகே புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தது