×

2வது திருமணத்தை ஏற்காமல் முதல் மனைவி பிரிந்ததால் கணவர் தீக்குளித்து சாவு

தேனி, நவ. 28: தேனி நகர் பயர்சர்வீஸ் ஓடைத்தெருவைச் சேர்ந்த வீருசின்னன் மகன் செல்வம்(40). இவருக்கு கடந்த 17 வருடங்களுக்கு முன்பாக திருமணமாகி மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன், இவருக்கு அல்லிநகரத்தை சேர்ந்த நாகலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை செல்வம் இரண்டாவதாக திருமணம் செய்தார். இதனால் செல்வத்திற்கும், முதல் மனைவி முத்துமாரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இதில் கணவரிடம் கோபித்துக் கொண்டு முத்துமாரி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த செல்வம், கடந்த 25ம் தேதி அவரது வீட்டில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து செல்வத்தின் தாயார் பசுபதி தேனி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2வது திருமணத்தை ஏற்காமல் முதல் மனைவி பிரிந்ததால் கணவர் தீக்குளித்து சாவு appeared first on Dinakaran.

Tags : Theni ,Selvam ,Veerusinnan ,Odaidheru ,Theni Nagar ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்