×

மார்த்தாண்டம் அருகே புகையிலை, மது பாட்டிலுடன் வியாபாரி கைது

மார்த்தாண்டம், நவ.28: மார்த்தாண்டத்தில் 58 பாக்கெட் புகையிலை மற்றும் 18 மது பாட்டிலுடன் வியாபாரி கைது செய்யப்பட்டார். மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பென்சாம் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பாகோடு ஆலுவிளையைச் சேர்ந்த தங்கதுரை(62) கடையில் சந்தேகத்தின் பேரில் திடீர் சோதனை செய்தபோது 58 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை, 750 மில்லி 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து தங்கத் துரையை போலீசார் கைது செய்தனர். மேலும் மார்த்தாண்டம் அருகில் ஞாறாம்விளை பகுதியில் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு திடீர் சோதனை செய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மேரி என்பவர் மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து 21 பாட்டில் மதுவை பறிமுதல் செய்ததனர்.

The post மார்த்தாண்டம் அருகே புகையிலை, மது பாட்டிலுடன் வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Trader ,Marthandam ,Kulithura ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...