×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகை

 

ஈரோடு, நவ. 28: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், நீரில் மூழ்கி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என பொதுமக்கள் மொத்தம் 322 மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்ற கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்கள், கடந்த முறை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான செயற்கை அவயங்களை வழங்கினார்.

மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நீரில் மூழ்கி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) லதா, சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் கோதைசெல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குமரேஷ் உட்பட துறை சாரந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகை appeared first on Dinakaran.

Tags : People's Grievance Meeting ,Erode ,Erode Collector ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் 457 மனுக்கள் குவிந்தன