ஆவடி: ஆவடி அருகே அடகு கடையில் நகை மற்றும் வெள்ளி திருடிய, வாலிபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆவடி அடுத்த திருநின்றவூர், நாராயணசாமி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மயூர் (32). இவர், திருநின்றவூர் ஸ்ரீராம் நகரில் அடகுக் கடை நடத்தி வருகிறார். இவர், நவம்பர் 20ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில், மறுநாள் காலை கடைக்குச் சென்று பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கபட்டிருந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு சவரன் தங்க நகை மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வினோத் (24), மணிகண்டன் (21) மற்றும் கணேசன் (21) ஆகியோரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் வெள்ளி மற்றும் 2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
The post ஆவடி அருகே அடகு கடையில் திருடிய 3 வாலிபர்கள் கைது: நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.
