×

தண்ணீர் தொட்டியில் குழந்தை, தாய் சடலம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் வைஷாலி என்ற குழந்தை இருந்தது. நேற்று முன்தினம், கார்த்திகை தீபம் என்பதால், முனிராஜ் அந்த பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் முனிராஜின் தங்கை தீபா, அண்ணன் வீட்டுக்கு துணி துவைப்பதற்காக வந்துள்ளார். அப்போது, வீட்டில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடியதால், கேட் வால்வை அடைப்பதற்காக தீபா சென்றார். அங்கு 7 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில், மீனா மற்றும் குழந்தை வைஷாலி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த ஓசூர் டவுன் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்ணீர் தொட்டியில் குழந்தை, தாய் சடலம் appeared first on Dinakaran.

Tags : Muniraj ,Hosur Torapalli Agraharam, Krishnagiri district ,Meena ,
× RELATED சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை...