×

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர்,புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா பகுதிகளில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த காற்றழுத்த மண்டலம் மேலும் வலுப்பெற்று டிசம்பர் 1ம் தேதி புயலாக வலுப்பெறுகிறது.

வங்கக்கடலில் நடப்பு வடகிழக்கு பருவத்தில் 2வது புயல் உருவாகிறது. வங்கக்கடலில் நடப்பு வடகிழக்கு பருவத்தில் ஏற்கனவே மிதிலி புயல் உருவானது.புதிய புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரைத்த michaumg என்ற பெயர் வைங்கப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கிழக்கு காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கனமழை, கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வாழை மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருச்சி ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chengalpattu ,Cuddalore ,Meteorological Department ,Puthukkottai ,Ramanathapuram ,Tamil Nadu ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...