- உளுந்தூர்பேட்டை
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- கட்டு நெமிலி
- களமருதூர்
- அராலி
- பிள்ளையார்குப்பம்
- Tirunavalur
- வள்ளியூரில்
- Sengurichi
- தின மலர்
உளுந்தூர்பேட்டை, நவ. 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, காட்டு நெமிலி, களமருதூர், அரளி, பிள்ளையார்குப்பம், திருநாவலூர், வெள்ளையூர், செங்குறிச்சி, பாதூர், நகர் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகாலை 3 மணி முதல் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வந்தது. இதேபோல் மாலை நேரங்களிலும் அடிக்கடி மழை பெய்து வந்தது. இந்த மழையினால் பேருந்து நிலைய பகுதியில் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் வாகனங்களை ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்கின்றனர். அதிகாலை முதல் விடாமல் பெய்து வரும் இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரையிலும் மற்றும் நேற்று 2வது நாளாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post உளுந்தூர்பேட்டை கிராமங்களில் கொட்டி தீர்த்த கனமழை appeared first on Dinakaran.