×

திருச்சி ரவுடி என்கவுன்டர் எதிரொலி ஐஜேகே நிர்வாகியிடம் 4 மணி நேரம் விசாரணை

திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் (எ) கொம்பன் ஜெகன். பிரபல ரவுடியான இவர், கடந்த 22-ம் தேதி போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இந்தநிலையில் திருவெறும்பூர் அருகேயுள்ள கிழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ் (எ)பட்டறை சுரேஷ் (41). இவர் ஐஜேகே கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவரது மனைவியான சுதா பிரியா கிழக்குறிச்சி ஊராட்சி துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். சுரேஷ் மீது தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சுரேஷ் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த போலீசார் அவரை அழைத்துச் சென்று சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து சுரேஷிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கிக் கொண்டு இரவு 10 மணியளவில் போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.

The post திருச்சி ரவுடி என்கவுன்டர் எதிரொலி ஐஜேகே நிர்வாகியிடம் 4 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : IJK ,Tiruverumpur ,Jagan (A) Komban Jagan ,Panayakurichi ,Trichy district ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...