×

மின்சாரம் தாக்கி 2 யானைகள் பலி

சத்தியமங்கலம்: தாளவாடி, தேனிக்கோட்டை மலைப்பகுதிகளில் மின்வேலியில் சிக்கி 2 யானைகள் பரிதாபமாக பலியாகின. ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதி இக்கலூர் கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சி பெண் யானை நேற்று அதிகாலை இறந்து கிடந்தது. தகவலறிந்து வந்த தாளவாடி வனத்துறையினர் யானை இறந்து கிடந்த நிலத்தின் உரிமையாளர் விவசாயி மகாதேவசாமி மற்றும் அருகில் உள்ள தோட்டத்தை சேர்ந்த மாதேஷ், நந்தீஷ் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தாவரகரை அருகே நேற்று முன்தினம் இரவு உணவு தேடி வந்த யானை கூட்டத்தில், ஒரு பெண் யானை தனியார் நிலத்தில் உள்ள வயலில் இருந்த மின் வயரை வாயால் கடித்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், ஓசூர் முன்னாள் அதிமுக நகர செயலாளர் பால்நாராயணன் என்பவர் நிலத்தில் இருந்த மின் வயரில் சிக்கி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் பர்கூர் மலைப்பகுதியில் காட்டு யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில் நேற்று தாளவாடி மலைப்பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் யானை பலியான சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* பிரவசவத்தின்போது பெண் யானை சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உறுகுட்டை வனப்பகுதியில் நேற்று காலை பெண் யானை ஒன்று குட்டி ஈன்ற பிறகு உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வந்த ஜவளகிரி வனத்துறையினர், இறந்த தாய் யானையின் அருகே, உயிருடன் இருந்த குட்டியை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் யானையை முறைப்படி அடக்கம் செய்தனர்.

The post மின்சாரம் தாக்கி 2 யானைகள் பலி appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Thalavadi ,Thenikottai ,Erode District ,Talavadi Hills ,Ikkalur ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை