×

லாரி மீது கார் மோதல் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி

சூளகிரி: சூளகிரி அருகே, நேற்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில், சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த ரகுபதி மகன் தமிழன்பன்(21), மேட்டூரைச் சேர்ந்த தஸ்வின் (22), திருச்சியைச் சேர்ந்த மோகன் மகன் சந்தோஷ் (22), சஸ்வின்(22), திருப்பூரைச் சேர்ந்த நரேன்(22) ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும், நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து காரில், திருப்பூரில் நடக்கும் நிகழ்ச்சிக்காக புறப்பட்டு வந்தனர். அதிகாலை 5.30 மணி அளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளியில், பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி, எந்தவித சிக்னலும் கொடுக்காமல் திடீரென இடதுபுறமாக திரும்பியது. இதனால் பின்னால் வேகமாக வந்த கார், எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி சந்தோஷ், தமிழன்பன், நரேன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தஸ்வின் மற்றும் யஷ்வின் படுகாயம் அடைந்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post லாரி மீது கார் மோதல் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Chulagiri ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...