×

20 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றை கடக்க பரிசல் பயணம்: பாலம் அமைக்க கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் அமைந்துள்ள வெங்கலப்பாளையம் பகுதியில் இருந்து ஊத்துக்குளி பகுதிக்கு செல்ல சாலை மார்க்கமாக செல்ல 10 கிலோமீட்டர் தொலைவு ஆகிறது. அதுவே நொய்யல் ஆற்றை கடந்து செல்லும் போது பயண தொலைவு 2 கிலோமீட்டராக குறைகிறது. இதனால் வெங்கலப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றில் இருகரைகளிலும் கம்பம் நட்டு ஆற்றின் குறுக்கே கம்பி கட்டி அதனை பிடித்தபடி பரிசலில் செல்ல கிராம மக்கள் ஏற்பாடு செய்து உள்ளனர்.

கத்தாங்கன்னி, வயக்காட்டுபுதூர், கணபதி பாளையம், வெங்கலப்பாளையம் என 5 கிராம மக்கள் இந்த பரிசலை இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். நொய்யலில் அதிக அளவில் வெள்ளம் வரும் காலங்களில் இந்த பரிசல் பயணத்தையும் பயன்படுத்த முடியாது என்பதால் தங்களுக்கு இப்பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 20 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றை கடக்க பரிசல் பயணம்: பாலம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Noel River ,Tiruppur ,Vengalapalayam ,Tiruppur district ,Kangeyam Taluga ,Uthakkuli ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...