×

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

மோகனூர், நவ.26: மோகனூரை அடுத்த ஒருவந்தூர் பகுதியில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக, மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மோகனூர் எஸ்ஐ துர்க்கைசாமி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செல்வகுமார் ஆகியோர், ஒருவந்தூர் பகுதியில் பள்ளி அருகே உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது இரண்டு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்து பொருட்களை விற்பனை செய்த கதிர்வேல், வெங்கடாசலம் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், தலா ₹5 ஆயிரம் அபராதம் விதித்து, 2 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் கடையில் விற்கப்பட்ட 1 கிலோ ஹான்ஸ், 336 கிராம் பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Mohanur police ,Oruvantur ,Dinakaran ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு