×

களக்காடு அருகே வீடு புகுந்து தாய் மகன்கள் மீது தாக்குதல்

களக்காடு,நவ.26: களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரம் காலனியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் ரமேஷ் (25). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது, ஜெ.ஜெ.நகரை சேர்ந்த இசக்கியப்பன், அக்பர், தமிழன், முத்து உள்பட 9 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, ரமேஷ், அவரது 17 வயது சகோதரர், அவரது தாயார் தங்கம்மாள் (44), ஆகிய மூவரையும் தாக்கினர். மேலும் ரமேஷின் செல்போன், ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து களக்காடு போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்கு பதிவு செய்து இசக்கியப்பன் உள்பட 9 பேர் கும்பலையும் தேடி வருகிறார்.

The post களக்காடு அருகே வீடு புகுந்து தாய் மகன்கள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Kaliyappan ,Ramesh ,Chidambarapuram Sethurayapuram Colony ,Kalakkadu ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...