×

நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நெல்லை,நவ.26: நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை (27ம் தேதி) பிற்பகல் 4.30 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Paddy ,Nella ,Decrease Gas Consumers ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...