×

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்பு குண்டாசில் வாலிபர் கைது

நெல்லை, நவ.26: நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் செல்வம் என்ற லெப்ட் செல்வம்(22). இவர் மீது நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு வழக்கில் மூலைக்கரைப்பட்டி போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து லெப்ட் செல்வத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து செல்வத்தை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவை நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஆதம்அலி பாளை மத்திய சிறையில் வழங்கினார்.

The post கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்பு குண்டாசில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Lt ,Selvam ,Perumal Magan Selvam ,Rekalkurichi ,Nanguneri ,Kundasil ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...