×

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சி 3 நாள் நடக்கிறது

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ‘நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்’ என்ற சிறப்பு புகைப்பட கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என்று தலைமை செயலாளர் சிவ தாஸ் மீனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நிறுவனங்களின் நாயகர் – கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னணி மாநிலமாக திகழ பல்வேறு நிறுவனங்களை தொடங்கி, சிறப்பாக நடைபெற காரணமாக விளங்கிய கலைஞரின் சிறப்புகளை அறிந்து கொள்ள உதவும் இந்த புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சி 3 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai Art Gallery ,Chennai ,Hero of Institutions - Artist ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...