×

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் ஐடிஐ பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பொருட்டு நவ.29ல் சிறப்பு முகாம்


சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் ஐடிஐ பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பொருட்டு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக வெளிடியிட்டுள்ள அறிக்கையில்; மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஐடிஐ பிரிவில் தொழில் பழகுநர்கள் பயிற்சிக்கு தேவைப்படுகிறார்கள். பின்வரும் ITI-பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு முகாம் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து தொழில் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக அனுமதி கோரப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக தொழிற் பழகுநர்கள் பயிற்சிக்காலியிடங்களை நிரப்பும் பொருட்டு 29-11-2023 அன்று காலை 10 மணி அளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டை, சென்னையில் நடைபெறும் சிறப்பு முகாமில் மாணவர்களை கலந்து கொள்ளுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் ஐடிஐ பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பொருட்டு நவ.29ல் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Transport Corporation ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...