×

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போலீஸ் எனக்கூறி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 6 பேர் கைது..!!

திருப்பூர்: காங்கேயத்தில் வியாபாரி வெங்கடேசனிடம் போலீஸ் எனக்கூறி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.50 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் ரூ.15 லட்சம் கூடுதலாக தருவதாக சேலத்தைச் சேர்ந்த கும்பல் கூறியுள்ளது. மோசடி கும்பல் கூறியதை நம்பி ரூ.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் சேலம் சென்றுள்ளார் வெங்கடேசன்.

காவலர் சீருடையில் வந்த 3 பேர், வியாபாரி வெங்கடேசன் சென்ற காரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். காரில் பணம் இருப்பதைக் கண்ட மூவரும் கறுப்புப் பணம் எனக் கூறி ரூ.50 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளனர். செங்காந்தள் விதைகளை வாங்கி வியாபாரம் செய்யும் வெங்கடேசனிடம் ரூ.50 லட்சம் பறித்த தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வெங்கடேசன் அளித்த புகாரை அடுத்து மோசடி ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

The post திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போலீஸ் எனக்கூறி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tirupur district ,Kangeyam ,Tirupur ,Venkatesan ,Gangeyam ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்