×

மாயமான வங்கி மேலாளர் ஆற்றில் சடலமாக மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் புல்லம்பாறை பகுதியை சேர்ந்தவர் சலீம். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கனரா வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி ஷெமி (49). கோவை நாச்சியார்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஷெமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சில வாரங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து ஊருக்கு வந்திருந்தார். பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷெமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு திடீரென ஷெமி மாயமானார். கணவர், உறவினர்கள் பல இடங்களிலும் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வாமனபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மோப்பநாய் கொண்டு வந்து சோதனை நடத்தினர். அப்போது நாய் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள வாமனபுரம் ஆறு அருகே சென்று நின்றுவிட்டது. இதையடுத்து போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஆற்றில் சோதனை நடத்தினர். அப்போது ஷெமி உடல் ஆற்றின் கரையோரத்தில் ஒரு மரத்தில் சிக்கி கிடந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post மாயமான வங்கி மேலாளர் ஆற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Saleem ,Pullambara, Thiruvananthapuram District, Kerala ,Kanara Bank ,Bank ,Dinakaran ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...