×

உத்திரமேரூரில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம்

உத்திரமேரூர், நவ.25: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி செயலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மாவட்ட திட்ட இயக்குநர் செல்வகுமார் கலந்துகொண்டு, ஆலோசனைகள் வழங்கினார். இதில், பங்கேற்ற ஊராட்சி செயலர்கள், ‘அனைத்து கிராமப்புற மக்களுக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் அனைத்தும் முறையாக சென்றடைய வழிவகைகள் செய்ய வேண்டும். மேலும், பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதனை உடனுக்குடன் உறுதியளிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்களை நேரில் சென்றடையும் வகையில், முழுமையாக விசாரணை செய்து தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். ஊராட்சி செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் உதவியோடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதனைதொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் தவிர்த்து யாருக்கும் முக்கியத்துவம் அளிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தார். இந்நிகழ்வின்போது, உதவி திட்ட இயக்குநர் விஷ்ணுபிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், நிர்மலா, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post உத்திரமேரூரில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Uttamerur ,Uthramerur ,Dinakaran ,
× RELATED சாலவாக்கத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை