×

கோவில்பட்டி அருகே துறையூரில் ₹14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் யூனியன் சேர்மன் திறந்து வைத்தார்

கோவில்பட்டி, நவ. 25: கோவில்பட்டி அருகே துறையூரில் ரு.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் திறந்து வைத்தார். கோவில்பட்டி யூனியனுக்குட்பட்ட துறையூரில் ₹14 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. துறையூர் பஞ். தலைவி சண்முகலட்சுமி கணேஷ் பாண்டியன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் பங்கேற்று அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் திமுக அயலக அணி மாவட்ட தலைவர் சுப்புராஜ், ஊராட்சி துணை தலைவர் முருகபூபதி, ஊராட்சி செயலர் முத்துலட்சுமி, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் துணை தலைவர் கணேஷ் பாண்டியன், யூனியன் கவுன்சிலர் செந்தில் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கோவில்பட்டி அருகே துறையூரில் ₹14 லட்சத்தில் அங்கன்வாடி மையம் யூனியன் சேர்மன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Anganwadi center ,Satharyur ,Kovilpatti ,Sariyur ,Union Chairman ,Kasthuri ,Dinakaran ,
× RELATED அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது