×

சிறையில் கைதி தற்கொலை முயற்சி

சங்கரன்கோவில், நவ. 25: திருவேங்கடம் அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் திருமலைக்குமார் (35). இவரை திருட்டு வழக்கில் சின்ன கோவிலான்குளம் போலீசார் கைது செய்து சங்கரன்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் உள்ள அறையில் கைலியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் மற்றும் சிறையில் உள்ள காவலர்கள், திருமலைக்குமாரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சிறையில் கைதி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Sankarankoil ,Thirumalikumar ,Karadikulam ,Thiruvenkatam ,Chinna Kovilankulam ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...