×

₹22.77 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

மோகனூர், நவ.25:மோகனூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 15,147 பேர் உள்ளனர். பேரூராட்சியில் தடையின்றி குடிநீர் வழங்க அம்ரூத் 2.0 குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் படி காவிரி ஆற்றில் நீர் உந்துகிணறு அமைத்து பேரூராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலைத்தொட்டிகளில் கொண்டுசென்று வீட்டிற்கு ஒரு குடிநீர் குழாய் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க ₹22.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிதியை பெற்றுத்தந்த ராஜேஷ்குமார் எம்பியை, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜவஹர், மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, தலைவர் வனிதா மோகன்குமார், துணை தலைவர் சரவணக்குமார், பேரூராட்சி உறுப்பினர்கள் உடையவர், செல்லவேல் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் உடனிருந்தார்.

The post ₹22.77 கோடியில் புதிய குடிநீர் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Amruth ,Dinakaran ,
× RELATED மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது