×

முட்டத்தில் படகு இன்ஜின்கள் திருட்டு

குளச்சல், நவ.25: முட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த வள்ளத்தில் இன்ஜின்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஜோஸ் மனோஜ்(41). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 16ம் தேதி வழக்கம்போல் மீன்களை பிடித்துவிட்டு வள்ளத்தை முட்டம் தனியார் துறைமுகத்தில் நிறுத்தி இருந்தார். மறுநாள் தொழிலுக்கு செல்ல வள்ளத்தை பார்க்கும்போது, வள்ளத்தில் இருந்த 2 இன்ஜின்கள்,2 பெட்ரோல் டேங்குகள், 2 மண்ணெண்ணெய் டேங்குகளை காணவில்லை. உடனே அக்கம் பக்கத்தில் தேடியும் அவைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஜோஸ் மனோஜ் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். தற்போது இந்த வழக்கு வெள்ளிச்சந்தை போலீசுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. வெள்ளிச்சந்தை போலீசார் மீனவரின் வள்ளத்தில் இருந்து இன்ஜின்கள் மற்றும் பெட்ரோல், மண்ணெண்ணெய் டேங்குகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர்.

The post முட்டத்தில் படகு இன்ஜின்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Muttam. Kadiyapatnam ,Manavalakurichi ,Muttam ,Dinakaran ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது