×

போலியான தரவுகள் மூலம் வருமானவரி பிடித்தத்தை திரும்பபெற்றவர்கள் மீது நடவடிக்கை

 

தஞ்சாவூர், நவ.25: போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்ப பெற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் ஆணையர் நித்யா தலைமையில் நடைபெற்ற வருமான வரி விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருமான வரித்துறை சார்பாக வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

விழிப்புணர்வு கூட்டம் வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் நித்யா தலைமையில், மாவட்ட கருவூல அதிகாரி கணேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சாவூர் வருமான வரி உதவி ஆணையர் சீனிவாசன், வருமான வரி அதிகாரிகள் வில்விஜயன், சுரேஷ்குமார் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கருவூலத்திற்கு உட்பட்ட பணம் வரைதல் மற்றும் வழங்குதல் அதிகாரிகள் சுமார் 500 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இக்கூட்டத்தில் வருமான வரி பிடித்தம் தொடர்பாகவும், போலியான தரவுகள் மூலம் வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான தீர்வாக திருத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட வருமான வரி படிவம் தாக்கல் செய்து தவறை திருத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட தகவல்களை அனைத்து பணம் வரைதல் மற்றும் வழங்குதல் அதிகாரிகள் தங்கள் அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

The post போலியான தரவுகள் மூலம் வருமானவரி பிடித்தத்தை திரும்பபெற்றவர்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே...