சென்னை: தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக இருந்த பி.சங்கர் ஐஏஎஸ் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 இயக்குனராக இருந்த எஸ்.பிரபாகர் ஐஏஎஸ் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நில அளவை மற்றும் ஒப்படைப்பு துறை இயக்குனராக இருக்கும் மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் கூடுதல் பொறுப்பாக மக்களுடன் முதல்வர் திட்டம், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்ஆளுமை கூடுதல் தலைமை செயல் அதிகாரி ரமணசரஸ்வதி, கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு நுண்ணிழை கழகம் (டான்சி டெட்) மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸுக்கு பதிலாக கவனிப்பார்.
The post ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் மாற்றம் appeared first on Dinakaran.
