×

அனுமதியற்ற மனைப்பிரிவு, மனை வரன்முறை செய்ய காலநீட்டிப்பு: வீட்டுவசதி துறை செயலாளர் சமயமூர்த்தி தகவல்

சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் சமயமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த உள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.2.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 4.9.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளவும்.

The post அனுமதியற்ற மனைப்பிரிவு, மனை வரன்முறை செய்ய காலநீட்டிப்பு: வீட்டுவசதி துறை செயலாளர் சமயமூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Housing Department ,Samayamurthy ,CHENNAI ,Dinakaran ,
× RELATED புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5...