×

5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


சென்னை: தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநரான டாக்டர். பி. சங்கர் ஐ.ஏ.எஸ்., இடமாற்றம் செய்யப்பட்டு, வேளாண்-விவசாயிகள் நலத் துறையின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக பி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக எஸ்.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் நியமித்துள்ளார்.

The post 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,IAS ,Dinakaran ,
× RELATED சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட...