×

மதுராந்தகம் அருகே தனியார் நிறுவன வேன் கவிழ்ந்து 5 பேர் காயம்


மதுராந்தகம்: மதுராந்தகத்தில் இருந்து படாளம் நோக்கி தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி கொண்டு ஒரு வேன் இன்று காலை புறப்பட்டது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வேன் சென்று கொண்டிருந்தது. மதுராந்தகம் அடுத்து கருங்குழி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் சென்றபோது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்தவர்கள் அலறி துடித்தனர்.

இதை பார்த்ததும் அவ்வழியாக வந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயமடைந்த டிரைவர் மற்றும் 5 பெண் தொழிலாளர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post மதுராந்தகம் அருகே தனியார் நிறுவன வேன் கவிழ்ந்து 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Batalam ,Maduranthakam ,Dinakaran ,
× RELATED தெருமுனை பிரசார கூட்டம் மோடியின்...