×

அதிகமாக மது குடித்து விஏஓ உதவியாளர் சாவு

 

தர்மபுரி, நவ.24: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சோமனள்ளி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயக்கண்ணன்(52). இவர் இண்டூர் அருகே மூக்கனள்ளியில், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது இளைய மகன் ஜெயசீலன் என்பவர், பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக, காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால், மனஅழுத்தத்தில் இருந்த ஜெயக்கண்ணன், அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில், ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவதாகவும், இதற்காக ஒகேனக்கல் செல்வதாகவும் கூறி விட்டு, நேற்று முன்தினம் சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரை குடும்பத்தினர் தேடிய போது, ஒகேனக்கல் காவிரியாற்றின் அருகேயுள்ள நாகர்கோவில் கழிவுநீர்தேக்கம் அருகே, குடிபோதையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிகமாக மது குடித்து விஏஓ உதவியாளர் சாவு appeared first on Dinakaran.

Tags : VAO ,Dharmapuri ,Jayakannan ,Somanalli Adithiravidar Colony ,Nallampally, Dharmapuri district ,Indore ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!