×

கடன் பிரச்னையில் குடும்பத்தினர் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

 

தேனி, நவ. 24: தேனி அருகே பழனிசெட்டிபட்டி டிபிஎன் ரோட்டில் குடியிருப்பவர் ராமர் மகன் ராஜமாணிக்கம்(34). இவர் புளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் பழனிசெட்டியில் குடியிருக்கும் உதயகுமார் மகன் விவேக்(33) என்வரிடம் குடும்ப செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் பெற்றார். கடனை திருப்பித் தராததால், கொடுத்த கடனை திருப்பித் தருமாறு விவேக் பலமுறை கேட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விவேக் மற்றும் இவருக்கு ஆதரவாக தேனி பங்களாமேட்டில் குடியிருக்கும் செல்வம் மகன் அரவிந்த்(28), பழனிசெட்டிபட்டியில் குடியிருக்கும் முத்துக்கிருஷ்ணன் மகன் அய்யனார்(32), சாந்தி(49) மற்றும் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் ராஜமாணிக்கத்தை தாக்கினர். இதனைத் தடுத்த அவரது மனைவி அன்னலட்சுமி மற்றும் மகன் யுவன்சரண் ஆகியோரையும் தாக்கியதில் மூவரும் காயமடைந்தனர்.

இதில் படுகாயமடைந்த ராஜமாணிக்கம் தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விவேக், அரவிந்த், அய்யனார், சாந்தி மற்றும் ஒருவர் என 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கடன் பிரச்னையில் குடும்பத்தினர் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Theni ,Ramar ,Rajamanikam ,Palanisetipatty DPN Road ,Teni ,Tamarind ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்