×

திருமணமாகாத ஏக்கத்தில் 2 வாலிபர்கள் தற்கொலை

தேனி, நவ. 24: திருமணமாகாத ஏக்கத்தில் இருவேறு சம்பவங்களில் இரு வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரத்தினம் நகர் 7 வது தெருவில் குடியிருப்பவர் ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன்(46). இவரது தம்பி அமர்நாத்(42). கார்த்திகேயனுக்கு திருமணமாகிய நிலையில், கூலி வேலை பார்த்து வந்த அமர்நாத்துக்கு திருமணமாகவில்லை. இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடக்காததால் மனவிரக்தியில் அமர்நாத் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி தேனி நகர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கியிருந்த அமர்நாத், விஷம் அருந்தி மயங்கினார். இவரை மீட்டு தேனி அரசினர் மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அமர்நாத் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இதேபோல, தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் காமாட்சியம்மன் கோயில் தெருவில் குடியிருப்பவர் ரவீந்திரன் (60).

இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள்கள். இவர்களில் மூத்த மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி விட்டது. 2வது மகனான அழகர்சாமிக்கு (32) திருமணம் ஆகவில்லை. திருமணமாகாததால் மன உளைச்சலில் இருந்த அழகர்சாமி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post திருமணமாகாத ஏக்கத்தில் 2 வாலிபர்கள் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Theni ,Oonjampatti ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்